Friday, September 21, 2012

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

எவனுடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ அவனையே நான் மகாத்மா என்பேன்; மற்றவர்கள் துராத்மாக்களே.

எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது. இது என் உறுதியான நம்பிக்கை

தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரம் ஆகும்.

அளவற்ற பலமும் பெண்ணைப் போல் இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே உண்மை வீரன்.

இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.

ஓ சிங்கங்களே! நீங்கள் செம்மறியாடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்.

சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்

உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.

பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

உண்மைக்காக எதையும் துறக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

தன்னலம் சிறிதும் இல்லாமல் நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்

இரக்கம் உள்ள இதயம் சிந்தனை ஆற்றல் படைத்த மூளை வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.

இரக்கம் உள்ள இதயம் சிந்தனை ஆற்றல் படைத்த மூளை வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.

வீரர்களே கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்! தடைகளிலிருந்து விடுபடுங்கள்!
இளைஞனே வலிமை அளவற்ற வலிமை – இதுவே இப்போது தேவை.

சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!

உடல் பலவீனத்தையோ மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

Monday, June 4, 2012

*********************** இப்போதும் அடிக்கடி உன் நினைவுகள் எழும், சில் மிஷங்களும் பரிமாறல்களும் என்னை அறியாமலேயே உதட்டில் புன்னகையைத் தோற்றுவிக்கும், வீதியில் போகும் போது நான் அடிக்கடி சிரிப்பதாக தெரிந்தவர்கள் கூறுவார்கள் காரணம் இதுவாகவும் இருக்கலாம், நானும் பலர் தன் பாட்டிற் சிரிப்பதை வீதிகளில் கண்டிருக்கிறேன் அவர்களுக்கும் இது தான் காரணமோ தெரியவில்லை, ஆனாலும் கடந்த காலங்களைப்போல அந்தச் சிரிப்புக்கு பின்னர் எழுவதான ’கண்ணீரும் மனச்சோர்வும்’ இப்போது இல்லை என்றே கூறுவேன், ஆயினும் உன் நினைவுகள் அடிக்கடி எழும் ஏதோ எழுதுவேன் மெளனமாவேன்.. ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++++++++ எத்தனை முறை வேண்டுமானாலும் குழந்தையாகலாம் உன் மடி கிடைக்கும் என்றால்... சொர்கத்தில் இருக்கும் என் காதலைத்தான் உனக்கு கவிதையாய் தருகிறேன் அதை நீ தெரிந்தோ தெரியாமலோ கிழித்தெறிந்து சாகடித்துவிடுகிறாய்... +++++++++++++++++++++++++++++++++++ உன்னை பார்த்த முதல் கணமே, உன் அனுமதியின்றி காதல் செய்தேன் ... உன் மீன் போன்ற விழிகளால் வலை விரிக்கப்பட்டு ,வீழ்த்தப்பட்டேன்... உன்னை காணுவதற்காக என் கால்களை வேலை வாங்கினேன் ... இமை மூட பயந்தேன் , . நிமிடங்களை கணக்கிட்டு செலவு செய்தேன்... உன்னை பார்த்த நிமிடங்களை , பொக்கிஷமாய் நெஞ்சில் புதைத்தேன்.. உன்னை காணாத நொடிகளை, நகர்த்த முயற்சி செய்தேன்... உன் முன் மௌனமாகும் உதடுகளை விட்டு, கண்கள் மூலம் காதலை சொல்ல முயன்றேன் ... என் காதல் உனக்கு புரிந்ததா? இல்லையா? என்று எண்ணி நித்திரை தொலைத்தேன் .. நிஜங்களை வெறுத்தேன், கனவுகளை நம்பினேன்.. இப்படி உன்னால் உண்ணாமல் திரிந்தேன், உன்னில் உயிராக வாழ ... உன்னை விட்டு பிரிய போகிறேன் உன் அனுமதியின்றி கண்ணீருடன் , உன் நினைவுகளை உன்னிடம் கடனாக பெற்று.. .காரணம் கேட்காதே ... இது விதியின் வஞ்சனை,. ....................................................................................

Monday, February 6, 2012